இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

August 6, 2017

நட்புக்கும் மேலேது இங்கு !

நட்புதின வாழ்த்துகள் !

1036)
”ஏன்வேண்டும் ஏணி!” எனக்குமுன்,என் நட்பவன்
’நான்’என நிற்கும் பொழுது


1037)
மகிழ்வில் கலப்போரைக் காட்டிலும், உந்தன்
இகழ்வில்உடன் நிற்பதுதான் நட்பு


1038)
பங்கெடு நண்பன்வெல் லும்பொழுது, பங்குகொடு
தோற்றுஅவன் வாடும் பொழுது


1039)
ஏனென்றுக் கேட்டுப்பின் தீர்ப்பது தான்உறவு,
தீர்த்தப்பின் தான்கேட்கும் நட்பு


1040)
விருதுதரும் கையை விடமேலாம், தோற்கும்
பொழுதுதொடும் ஒற்றை விரல்

August 7, 2016

நட்பதிகாரம்..!


நண்பர்கள் தின வாழ்த்துகள் !

816)
தன்தவறைக் கல்போன்றும் உன்தவறை எள்போன்றும்
காண்பவனின் நட்பே வரம்


817)
ஆவேசம் நட்பினுள் கொண்டாலும் நட்பாகும்;
வேசமிட்டால தான்தப்பா கும்


818)
சிந்திக்கும் நட்பின் துணைமட்டும் தான்எதையும்
சந்திக்க வைக்கும் உனை


819)
உன்தவறை உன்முன்நின்று சொல்பவன்தான் நண்பன்;உன்
பின்நின்று சொல்பவன் வேறு


820)
சிந்திக்கும் நண்பரை விட்டு விலகியதால்
சந்திக்கு வந்தோர் பலர்

August 2, 2015

நட்பு....ட்பு.....பு........பூ ...!!!!!!!!!!

--- நட்பு தின வாழ்த்துகள் ---
561)
ஆகாயம் கீழிறங்கும் நீநம்பு; உறவுக்குள்
ஆதாயம் தேடாது நட்பு

562)
தாளும்தோள் தாங்குவான் தோழன்; அவனால்தான்
வாழுமிந்தப் பாழும் உலகு

563)
வழிமொழிய மட்டுமல்ல; தப்பென்றால் உன்முன்
வழிமறித்தும் நிற்பதுதான் நட்பு

564)
உரிமை தரும்உறவைக் காட்டிலும் நன்றாம்
உறவை உருவாக்கும் நட்பு

565)
ஒருவர் பிரிந்தால் இறப்பது உறவாம்;
இறந்தால் பிரிவதுதான் நட்பு