இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label பயம். Show all posts
Showing posts with label பயம். Show all posts

July 14, 2017

அச்சம் தவிர்.. !


1006)
வெல்லுமெண்ணம் உன்னுள் வராத வரையிலும்
புல்லுமுனை வென்று விடும்


1007)
நெஞ்சினுள் மூர்க்கம் வளர்க்கமுனை; அஞ்சினால்
குஞ்சும் மிரட்டும் உனை


1008)
மிரட்சிக்கு இடம்கொடுத்தால் மாய்ந்து விடுமாம்
புரட்சித் தடம்பதிக்கும் வாய்ப்பு


1009)
அச்சம் வழியும் மனமுடையோர்க்கு உச்சம்
அடையும் வழியில்லை ஆம்


1010)
எதிர்பற்றிச் சிந்தித்து அடங்காது எதிர்கொண்டு
சந்திப்போர்க்கு உண்டு சிறப்பு

June 21, 2016

நபிமொழி - 11 ... பயமேன் !


நானிருக்க பயமேன் !
766)
அஞ்சாதீர் நீர்எதற்கும்; பார்த்தபடி கேட்டபடி
உங்களுடன் தானிருப்பேன் நான்
............... குர்ஆன் 20:46

767)
எமைநீர் நினைத்திருப்பீர்; நானும் உமைத்தான்
நினைத்த படியிருப்பேன் ஆம்
.................. குர்ஆன் 2:152

768)
அறிவுரையைத் தந்தோம் பிறர்க்கு; மறைந்திருக்கும்
செய்தி அறிவார் பிறகு
........................ குர்ஆன் 38:87 88

அவனிருக்க பயமேன் !
769)
இறையை நினைத்துத் தொழும்பொழுது உந்தன்
அருகில் இருப்பான் அவன்
.................... முஸ்லிம்5212

770)
அருகில் இருப்பான் பதிலும் தருவான்
இறைமுன் துதிக்கும் பொழுது
.................. குர்ஆன் 2:186