இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label உறவு. Show all posts
Showing posts with label உறவு. Show all posts

August 6, 2016

நபிமொழி - 15 .... குடும்பவியல் !


என்குறள் 806 - 815 :
உறவியல்:
தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தாய்க்குப்பின் தான்வாய்க்கும்
தந்தையெனும் பந்தச் சிறப்பு
.............................. புகாரி 5971

கணவனின் செல்வத்தை செய்யும் செலவைக்
கணித்திருப்பது இல்லாள் பொறுப்பு
.................... புகாரி 5365

நல்லறம் தானே இறைவிருப்பு; பிள்ளைகளும்
செல்வமும் இவ்வாழ்வின் ஈர்ப்பு
....................... குர்ஆன் 18:46

சிந்தைத் தெளிவும் ஒழுக்கப் பயிற்சியும்
தந்தை வழங்கும் பரிசு


உணவளிக்க ஆளில்லா வேளையில் நானுண்டு
எனும்மகள்தான் உன்தர்மம் ஆம்

(மேலுள்ள இரு மொழிகளுக்கும் .. (கவனக் குறைவால்)குறிப்பெண்ணைக் பதியத் தவறிவிட்டேன். அறிந்தோர் சுட்டினால் மிக நன்றியுடனிருப்பேன்

இல்லறவியல்:
சமஉரிமை கொண்டோர் எனினும் தமக்கிடையில்
விட்டுக் கொடுத்தால் சிறப்பு
........................ புகாரி 2455

இல்லறத்தில் விட்டுக் கொடுத்தொத்துப் போவதில்
இல்லை ஒருபோதும் தப்பு
......................... புகாரி 2694

இல்லற வாழ்வை இறைவழியில் வாழ்வது;
நல்லறம் செய்வதற்கு ஒப்பு
........................ முஸ்லிம் 1674

உறவுநலம் காக்கச் செலவிடல் என்பது
உரியோர்க் கடமையா கும்
......................... புகாரி 5355

உறவின் நலம்காத்து வாழ்ந்து வருவோர்
உறவை விரும்பும் இறை
......................... புகாரி 5987

December 8, 2014

உறவுகள்


அறம்/ உறவதிகாரம் / என்குறள் 441-445 /

தாய்வந்து எனதருகில் தானமர்ந்தால் பின்னந்த
வானுலகு என்பதெல்லாம் பொய்

தங்கையிவள் மொண்டு வரும்கூழும்; கங்கையவள்
கொண்டு தரும்நீரும் ஒன்று

திக்காமல் எத்திக்கும் சொல்வதற்கு அச்சமில்லை;
அக்காவே எம்வாழ்வின் அச்சு

அக்காள் இருக்கும் வரைதான் தொடருமா
மச்சான் உடன்நல் உறவு

சொந்தங்கள் தள்ளியென்னை வைத்தாலும் என்அண்ணன்
தங்கத்தில் செய்துதந்தான் சங்கு