இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வெண்பா - காதல். Show all posts
Showing posts with label வெண்பா - காதல். Show all posts

June 25, 2012

இருவரியில் சொல்வேன் ..(குறள் போல) சில ...!


அவல்..அவள். .அவல்:)

106)
நினைவிலவள் வந்தவுடன் பெய்து நனைக்கிறதென்
தோட்டத்தை மட்டும் மழை

107)
விழியென்னும் வேலெய்து வீழ்த்தினாள்; வீழ்ந்தும்
வலியில் உணர்ந்தேன் இதம்

108)
வருவாய் வடிவெனக் காத்திருந்தேன்; வந்த
விடிவோ வருவாய் இழப்பு

109)
கொல்லையில் பூத்திருக்கும் முல்லைக்கும் உண்டு;உள்ளம்
கொள்ளை அடிக்கும் திறம்

110)
மங்கைக்கென் மீதேதோ கோபம்: நிகழ்வெண்ணி
மங்கத் தொடங்கியதென் கண்


..விடாது வருவேன்..:)

December 12, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....2

2)
உலகின் பேரழிவு ஆயுதம்:

வேல்ஏந்தி காத்திருக்கும் தோளின் வலியோடு

வால்தூக்கி சீறிவரும் தேளின் கொடுக்காக

மீன்கொத்தி வேகத்தில் மின்னல்போல் பாய்ந்தென்னை

ஏன்குத்திப் போகிறதுன் கண்


(வலி = வலிமை)




September 27, 2009

காத்திருக்கும்....!


மறையாத சூரியன்; மண்ணில் எனக்குக்
கரையாத சந்திரன வன்தான் - வரும்வரைக்
காத்திருப்பேன் தெற்கேநான்; இந்திய எல்லையைக்
காத்து வடக்கில வன்

என்றும் மறையாத என்மனச் சூரியனே
இன்றும் குறையாத என்குணச் சந்திரனே
காப்பாய் வடக்கைக் கரையாய் ; கரையாமல்
காத்திருப்பேன் உன்னையிங்கு நான்