இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வெண்பா - உணர். Show all posts
Showing posts with label வெண்பா - உணர். Show all posts

December 11, 2011

வெண்பா வ(ப)டிக்கலாம் வா....!


புதுக்கவிதைகள் போலவே ..... படித்தவுடன் புரியும் வண்ணம் எளிய தமிழில் வெண்பாக்களைத் தரமுடியும் எனக்காட்ட முற்படும் ஒர் 'அணிலின்' சிறு முயற்சி இது ....... பிடித்திருந்தால் தொடர்ந்து வாருங்கள் .... கருத்துக்களைக் கூறி ஆதரவு தாருங்கள்.....

பாரதியின் பிறந்த நாளில் பிறக்கிறது இந்த இழை....
உயரத்தில் பறக்கவைக்கப்போவது நீங்கள் தான்

1. அக்கினிக் குஞ்சு :

வேரோடு மண்மீதில் வீழ்த்தியதாய் எண்ணியே
பாரா(து) இருக்காதீர் பாரோரே - யாருமெதிர்
பாராத நேரமதில் பாரதிரச் சூழ்வேன்;நான்
பாரதியின் அக்கினிக் குஞ்சு ..

October 8, 2009

வீரம் ?


வாழையை வெட்டியே வீழ்த்தி; இளம்குரும்
பாளையைச் சீவியதைப் போரென்பார் - காளையின்
வாலினைக்கூ டத்தொட்டு வீரமதைக் காட்டாத
கோழையுன் தீரம் உணர்

உன்னால் முடியும்


வெட்டிட வெட்டிட வாழ்வளிக்கும் வாழையிடம்
வெட்டியாய் காட்டாதே வீரம் - முடியும்
முடக்கியேக் காட்டிடு முட்டவரும் காளையை;
திட்டிவா சல்முன் முயல்