இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label குறிப்பு. Show all posts
Showing posts with label குறிப்பு. Show all posts

September 12, 2015

குறிப்புகள் சில ... உள்ளிருக்கும் செய்திகள் பல ...!


596)
வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளையிலும் பள்ளத்தைப்
பார்த்துத்தான் பாயும் புனல்

597)
கூர்முனைத் தாக்குதலைத் தாங்கிநிற்கும் பாறையை
வேர்முனை வீழ்த்தி விடும்

598)
இடைவெளி இல்லாது இடித்தால்; மறையும்
இடிமேல் இருக்கும் பயம்

599)
இருள்சூழ்ந்து இருக்கும் பொழுதே தெரியும்
மிகவும் தெளிவாய் நிலவு

600)
அருகில் இருந்தும் அகப்பை அறியா(து)
அருமை அமுதின் சுவை

September 9, 2014

சில குறிப்புகள் உனக்கு


சில குறிப்புகள் உனக்கு / பொருள்

376)
இருகையும் சேர்ந்தே உழைத்தாலும் உண்ண
ஒருகைக்குத் தான்தருவார் வாய்ப்பு

377)
சுள்ளிவெட்டும் வேளையில் சொல்லிவிட்டுத் தான்குத்தும்
முள்ளென்று எதிர்பார்த்தால் தப்பு

378)
கண்ணொன்றில் நீர்வடிந்தால் இன்னொன்றும் சேர்ந்தழுமே
தன்னால் உணர்வதுவே நட்பு

379)
வணங்கிமுன் நிற்போரைக் காட்டிலும் இன்னும்
பணிவாய் வணங்கப் பழகு

380)
அகலக்கால் வைக்காமல் ஆழம் புதைத்தால்
அகலும்;கால் சூழும் இழுக்கு