இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label வெண்பா - அவலம். Show all posts
Showing posts with label வெண்பா - அவலம். Show all posts

October 8, 2009

தப்புதான்...தப்புதான் !


”சொத்தப் பிரிச்சுத் தராமப் பொறுப்பின்றி
செத்ததுநம் அப்பாவின் தப்புதான்” -- துக்கத்தில்
பங்கு தவிர்த்து பணத்துக்கேங் கித்தவித்து
பொங்கியெழும் மானுடம் பார்

உயிரா?உயிலா??


உயிர்துறந்த பாவியின் உடலுக்கு முன்னால்
உயில்திறக்கும் சண்டையில் உற்றோர் - உயிலெங்கும்
ஓடுமோ?; மண்ணுள் ஒளிந்த(து) குடும்பத்தின்
கூடி வளர்க்கும் குணம்! ..

காக்கைகள்...


செத்தவரைச் சுற்றிலும் சத்தமாய் உற்றோர்கள்
சொத்துக்குச் சுற்றும் சிலம்பம்பார் - வைத்திருக்கும்
சோத்துக்குக் காக்கைகள் சண்டைபார்; சாய்ந்தது
சேர்த்து வளரும் குணம்