இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label அவலம். Show all posts
Showing posts with label அவலம். Show all posts

September 3, 2017

அனிதா : மனிதா வா ,இனியோர் அனிதா வரவேண்டாம், தடுக்கும் அணி_தா வா :

அனிதா :
என்குறள் 1096 - 1097 :
சிறுகனவை ஏற்றிப் பெருங்கனலாய் மாற்றிப்
பறந்ததுஎம் அக்னிக்குஞ்சு ஒன்று

தட்டிக் கொடுக்காமல் தட்டிவிட்ட தால்இன்று,
சரிந்த சரித்திரம்பார் இங்கு


அனிதாவின் வாய்மொழியும் கேள்வியும் :
என்குறள் 1098 - 1101 :
எதையோ படிக்கவைத்து, வேறெதிலோ தேர்வுவைத்தால்
சாகாமல் என்செய்வேன் சொல்

நேற்றுவரை தோற்றவர்தான் தொங்கினார், நூறுசதம்
வென்றஎனைத் தொங்கவைத்தீர் இன்று

தரவரிசை என்று, வரும்வரிசை கண்டு
கெட்டதென் குட்டிக் கனவு

தூக்கிவிடக் கேட்டுவந்தேன் மன்றம்முன், தூக்கிலிட்டுக்
கொள்என்று சொன்னது அது



மனிதா வா ,சேர்ந்தோர் அணி_தா வா :
என்குறள் 1092 - 1109 :
நோட்டையும் மாட்டையும் நீட்டையும் காட்டியுனை
பூட்டிவைக்கப் பார்ப்பாரை ஓட்டு

நீட்டென்றால் நீட்டவும் ஆட்டென்றால் ஆட்டவும்
வீட்டுநாய் இல்லையடா நீ

நீட்டென்றால் நீட்டும் குரங்காநீ, நீட்டி
முழங்கியுன் நோக்கத்தைக் காட்டு

விலக்குப் பெறச்சென்று விட்டு, விலைபோனோர்
வந்தால் வரவேற்போம் வா

வாதிடச் சென்றுவிட்டு, பேரம் முடிந்துவந்து,
சாதித்தக் கதைசொல்வார் பார்

ஊர்பார்க்க வேண்டுமென்று முந்திவந்து சந்திநிற்போர்
வேரறுத்து ஊதுவோம் சங்கு

பேத்தி வயதொத்தப் பிள்ளையைப் பெண்மணியாய்ப்
பார்ப்போரிங்கு என்னஇனம் கூறு

’’மருத்துவம் தான்படிப்பா?’’ என்றோர் மருத்துவரே
கூறினால் எங்கோ பிழை



’வ’ருத்துவர் ’’கிசுகிசு’’ :
என்குறள் 1110 - 1115 :
ஒதுக்கீட்டால் மேலேறி வந்துவிட்டு, அற்ப
ஒதுக்கீடிங்கு ஏனென்பார் பார்

ஆள்வோர் மனம்வந்து வீசுவதை வைத்துனது
வாழ்வினை ஓட்டென்பார் பார்

எச்சில் எறிவார் எனத்தெரிந்தால் பொச்சையும்
நக்கிவிடும் நாயாகென் பார்

இப்படித்தான் காண்கனவு என்றபின்னும் எப்படியோ
கண்டுகொண்டால் உன்தப்பென் பார்

சோற்றைப் பெறும்பொருட்டுச் செத்தவர்மேல் சேற்றையள்ளி
வீசவந்து முன்நிற்பார் பார்

மருத்துவரின் தந்தையை ஓர்அரசு ஊழியராய்
மாற்றியதைப் போற்றென்பார் பார்

August 13, 2017

சிசுவென்று நினைத்தயா..!

செய்தி : உத்திரப்பிரதேசம் .. அரசு மருத்துவமனை...ஆக்சிஜன் பற்றாக்குறை..60மணி நேரம் .. 70குழந்தைகள் மரணம்
1051)
சிசுசிதைமேல் நின்று பசுவதைப் போக்க
நடக்கிறது போராட்டம் நன்று


1052)
பிஞ்சென்றால் என்ன, பணம்கொஞ்சம் பாக்கிவைத்தால்
பிய்த்தெறிய அஞ்சாது அரசு


1053)
எரிவாயு ஏனென்று சொன்னது உயிர்வாயு
வீணென்று நின்றது அரசு


1054)
பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றும் பதறாத
வஞ்சகர்க்கு வைப்போம்வா நஞ்சு


1055)
நம்பிவந்த பிஞ்சுகளைக் காப்பாற்றா நண்பா!ஏன்
இவ்வாழ்வு, நாண்டுகொண்டு சாவு


August 12, 2017

மரம்... தப்பினால் , மரணம் !

என்குறள் :
1041)
வீட்டிலுள்ள மாட்டிற்கும் முன்நாம்நம் நாட்டுக்குள்
காத்திருக்க வேண்டியது காடு


1042)
மழைப்பிச்சை வாங்கும் மரத்தை அழித்தால்
மடிப்பிச்சைத் தான்எடுப்பாய் ஆம்


1043)
கதவாய் மரத்தையெல்லாம் மாற்றிவிட்டு, காற்று
வரத்திறந்து வைப்போம் கதவு


1044)
ஆறா யிரம்தான் விலைபோகும் நூறா
யிரம்கரு தாங்கும் மரம்


1045)
லட்சம் நடுவதே லட்சியம் என்பது
அலட்சியமா கும்நட்ட பின்பு

April 10, 2017

இலவு காக்கும் உழவு..!


படம்:நன்றி-RAVI PALETTE
861)
வீர விளையாட்டில் நேராய் விவசாயம்
சேரவழி செய்தது அரசு


862)
ஏடெடுப்போர் ஓங்கி இருந்தாலும் ஏரெடுப்போர்
ஏங்கினால் ஓடெடுக்கும் நாடு


863)
உழவன் உழைத்திருக்க உண்டிருந்தோம் அன்று/இன்று
உழவனையே உண்கிறோம் மென்று


864)
உழைப்பே உயர்வுதரும் என்றால் உழவன்
நிலைதாழ்ந்தே போவது எதற்கு


865)
விதைத்தது அனைத்தும் விளைந்தும் செழிக்கவில்லை
ஏனிங்கு உழவன் நிலை

August 1, 2015

மது.....து........த்து...........த்தூ...!!!!!!!!!!!!!!!


--- ஐயா . சசிபெருமாள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ---

556)
பார்’என்று பாடிவைத்தார் பாரதி; பாருக்கு
அவர்பேரே வைப்போம் அதற்கு
(அல்லது)
பாருக்குள் நல்லநாடு என்றதனால்; பாருக்கு
அவர்பேரே வைக்கும் அரசு


557)
தண்ணி அஅடிப்பார்அபார் தன்னை அழிப்பார்பார்
இம்மண்ணில் எங்கும்பார் பார்

558)
பழமாக உண்போரைப் போற்றும்; ரசமாக
வேண்டுவோர்க்கு ஊற்றும் அரசு

559)
பாருக்குள் நோக்கும்நம் பிள்ளைகள்; பாருக்குள்
விக்கும்நாள் பார்க்கும் அரசு

560)
மதுமீறிப் போகுமிடம் பேயாய் முதுகேறிப்
பாயும் அகத்திருக்கும் பாம்பு