இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

June 6, 2016

நபி மொழி - 9 .... ரமலான் நோன்பு ...!


என்குறள் : 741 - 750

முஸ்லிம் 1956
நரகம் அடைபடும், சொர்க்கம் திறக்கும்
ரமலான் தொடங்கும் பொழுது


புகாரி 2008
நன்றெதிர் பார்க்கும் ரமலான் தொழுகைமுன்;
நின்குறைமன் னிக்கப் படும்


முஸ்லிம் 1958
பிறைபார்த்து நோற்று; பிறைபார்த்து நோன்பைத்
துறப்பது மார்க்க மரபு


முஸ்லிம் 1990
கரும்பொருள் கண்மறைந்து, வெண்பொருள் முன்தெரியும்
வேளைக்குள் உண்டு பருகு


முஸ்லிம் 2004
விரைந்துதன் நோன்பைத் துறந்து, விரைந்து
தொழுவோர் இறைக்கு விருப்பு


முஸ்லிம் 2023
தன்னடக்கம் கொண்டோர்தாம் நோன்பிருக்கும் அன்று
துணையோடு இருந்தாலும் நன்று



முஸ்லிம் 2119
தானேமுன் வந்(து)அவன் நன்செய்வான்; நோன்பில்
உணவை உணர்வைவிடு வோர்க்கு


முஸ்லிம் 2093
இருபெரு நாளிலும் நோன்பில் இருப்பதற்கு
மார்க்கத்தில் உண்டு தடை


புகாரி 1975
பகலெல்லாம் நோன்பிருந்த பின்இரவு எல்லாம்
தொழுவதற்கு உண்டு தடை