இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

July 12, 2017

தேவன்வழி - 2 :- அன்பு..!



என்குறள்:- 991 - 995

ஒருவரின் மேல்ஒருவர் அன்பாய் இருங்கள்,நான்
உம்மேல் இருப்பதைப் போல்

யோவான் 113:34

உன்மேல்,நீ கொண்டிருக்கும் அன்பைப்போல், கொள்பிறர்மேல்
என்பது அனைத்திற்கும் தீர்வு

கலாத்தியர் 05:14

பிறரிடத்தில் என்னஎதிர் பார்த்தாயோ. செய்வாய்
அதைநீ முதலில் அவர்க்கு

மத்தேயு 07:12

வருத்தமுடன் பாரம் சுமப்போரே, என்னிடத்தில்
வாருங்கள், நான்தருவேன் ஓய்வு

மத்தேயு 11:28

உன்வாசல் தட்டுகிறேன், கேட்டுவந்தால், வாழ்ந்திருப்போம்,
உன்னுடன்நான் என்னுடன் நீ

வெளிப்படுத்தின விஷேசம் 3:20

November 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்




அன்பும்...அமைதியும் :

281)
அன்பென்னும் ஆயுதம் ஆளுமிட அண்மையின்
முன்பென்றும் வாராது வம்பு

282)
மகிழ்ந்த மனமுடையோர் முன்வாசல் தன்னில்
முகிழ்ந்து வரும்நல் உறவு

283)
அமைதியாய் உள்ளம் சமைந்துவிட்டால் சுற்றி
அமைவ(து) அனைத்தும் விருந்து

284)
நினைப்பதை எல்லாம் நிறைவாய் நினை;உந்தன்
எண்ணம்போல் தானமையும் வாழ்வு

285)
ஒத்து வரவில்லை என்றபின் பேசா(து)
ஒதுங்கி விடுவது நன்று

October 31, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்



அன்பே..அன்பே : / இன்பம்
266)
நானாக நீயானால் நீயாக நானாவேன்;
தானாகத் தேனாகும் வாழ்வு


267)
பூவுக்கு நாராக பூமிக்கு நீராக
ஆலுக்கு வேராக வா


268)
உயிரையும் கூறாய்ப் பிரித்து விடுவார்;
இயலுமா நம்உறவை கூறு


269)
சோர்வில் தலைசாய்த்தால் ஆகுமடி உன்மடி
சொர்க்கத்தின் வாசற் படி


270)
பக்கமில்லை என்றால்தான் என்னவாம்; என்மனப்
புத்தகத்தின் பக்கமெல்லாம் நீ