இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

August 23, 2017

இயற்கையின் கடிகாரங்கள் / ’அலாரம்’கள்


1061)
கரிச்சான் குயில்தன் குரலை எழுப்பும்
அதிகாலை மூன்று மணிக்கு


1062)
குயில்தன் குரலெடுத்துக் கூவும் அதிகாலை
நான்குமணி ஆன உடன்


1063)
நான்குக்கும் ஐந்துக்கும் மத்தியில் தான்சேவல்
கூவும் பெருங்குரலில் ஆம்


1064)
காகம் குழுவாய்க் கரையத் துவங்கினால்
ஆகும் மணிஅப்போது ஐந்து


1065)
சரசர வென்றுமீன் கொத்திச் சிறகசையும்
போது மணிஆகும் ஆறு

August 12, 2017

மரம்... தப்பினால் , மரணம் !

என்குறள் :
1041)
வீட்டிலுள்ள மாட்டிற்கும் முன்நாம்நம் நாட்டுக்குள்
காத்திருக்க வேண்டியது காடு


1042)
மழைப்பிச்சை வாங்கும் மரத்தை அழித்தால்
மடிப்பிச்சைத் தான்எடுப்பாய் ஆம்


1043)
கதவாய் மரத்தையெல்லாம் மாற்றிவிட்டு, காற்று
வரத்திறந்து வைப்போம் கதவு


1044)
ஆறா யிரம்தான் விலைபோகும் நூறா
யிரம்கரு தாங்கும் மரம்


1045)
லட்சம் நடுவதே லட்சியம் என்பது
அலட்சியமா கும்நட்ட பின்பு

July 30, 2017

மழை... மழை..... மழை !



1021)
மழைக்காலம் என்றொன்று இருந்ததாம் அன்று,
மழைநாட்கள் மட்டும்தான் இன்று


1022)
குடையென்ன செய்து விடமுடியும், ஓயாது
அடைமழை பெய்யும் பொழுது


1023)
தொடரும் கொடும்வெயிலை ஏற்கும் மனது
நடுங்கும், மழைவலுக்கும் போது


1024)
மழையில் ஒதுங்கநடை தேடி அலைவோரின்
கையில் விரியாக் குடை


1025)
குடைமறந்த நாளில், தவறாமல் வந்து
விடுமெனக்கு மட்டும் மழை

July 13, 2017

இருவரி கொண்டுன் .. கண்முன் வரவைப்பேன் ... காட்சி..!


இயற்கை:
1001)
மலைமுகட்டில், நிற்கும் மரக்கிளையில், தொங்கும்
இலைநுனியில், தூங்கும் பனி


1002)
தலைமேல் அமர்ந்த பனித்துளி, காய்ந்தால்,
தலைநிமிரும் புல்லின் நுனி


1003)
மூங்கிலிலை மேல்தூங்கும் நீர்த்துளி, கைதாகும்
பாயும் கதிரோன் ஒளி


1004)
மழைநின்ற மாலைப் பொழுது, நனைந்த
இலைகள் கவிழும் அழுது


1005)
மலையில் வழிந்தோடும் தண்ணீர் விழுது,
வழியாடும் ஆலம் விழுது


படங்கள் :




April 18, 2017

மரம் ... ! வரும்காலத்தின் உரம் ... !!

891)
ஆளுக்கு ஒருமரம் நட்டு;வரும் நீர்தேக்க
ஊருக்கு ஒருகுளம் வெட்டு


892)
அறம்வளர்க்க அப்புறம் பார்ப்போம்; முதலில்
மரம்வளர்க்க முன்வரப் பார்


893)
சொன்னால் குளம்வெட்ட ஆளில்லை, தன்னால்
மரம்வெட்டா நாளில்லை ஆம்


894)
மரம்வைத்தால் கேலிசெய்யும் பார்,மரம் வெட்ட
வருவோர்க்குக் கூலிதரும் பார்


895)
மதம்வளர்க்க ஏங்கும் மனிதன், மரம்வளர்க்க
வந்தால்தான் ஓங்கும் உலகு

March 31, 2017

பாட்டி வைத்தியம் - 4 _காய்கனியின் நிறத்தில் மறைந்திருக்கும் குறிப்பு ...!




852)
பாயும் அழுத்தத்தை புற்றைக் குறைப்பதுடன்
நோய்எதிர்ப்பைக் கூட்டும் சிவப்பு

853)
கொழுப்பைக் குறைத்துத் தசையை எலும்பை
வளர்க்கும் பச்சை இனம்

854)
நீலம் உயர்த்தும் செரிமானம், நீளும்
உடல்உள் உறுப்பின் பலம்

855)
திசுக்குறைவை புற்றைத் தவிர்க்கும் இதய
நலனுயர்த்தும் மஞ்சள் பழம்

பாட்டி வைத்தியம் - 3 _ அறுசுவையும் மருந்து ...!




846)
கரும்புஅரிசி கோதுமை மூலம் இரும்பாய்
தசையை வளர்க்கும் இனிப்பு

847)
எலுமிச்சை தக்காளி மாங்காய் புளியால்
கொழுப்பைப் பெருக்கும் புளிப்பு

848)
சுரைக்காய் பூசணி முள்ளங்கி மூலம்
உமிழ்நீர் சுரக்க உவர்ப்பு

849)
மிளகு கடுகு மிளகாய் உருவில்
எலும்பைத் திடமாக்கும் கார்ப்பு

850)
பாகல்எள் கத்திரி வெந்தயம் வேம்பால்
நரம்பைவலு வாக்கும் கசப்பு

851)
அருகம்புல் வாழை அவரைநெல்லி கொண்டு
குருதிசுத்தம் செய்யும் துவர்ப்பு

May 29, 2016

பாட்டி வைத்தியம் - 2



721)
முன்நரை என்னும் குறைமறைந்து போய்விடும்
முள்முருங்கை உண்டுவரு வோர்க்கு


722)
நெல்லிக் கனிநான்கு நாளும்உண்; சொல்லிஇனி
நீளும்உன் வாழ்வுபிறர் முன்


723)
அருகம்புல் சாற்றின் அருமை அறிவாய்;
குருதியைச் சுத்தம்செய் வாய்


724)
அகத்துள் புழுவை அழிக்கும் அகத்தி;
அளவாய்ப் புசிக்கும் பொழுது


725)
வாழை இலைகொண்டு காயத்தைப் போர்த்து;
கொடும்தீயின் தாக்கத்தைப் போக்கு




April 5, 2016

பாட்டி வைத்தியம் !!

ஒரு புதிய முயற்சி :
நம் பாரம்பரிய .,இயற்கை மருத்துவத்தை , பாட்டி வைத்தியத்தை... குறளில் பதிய முயன்றிருக்கிறேன், ஆதரவு கிடைத்தால் தொடர்வேன் :)

626)
கருத்தரிக்க வைக்கும் அணுக்கள் அதிகரிக்க,
கத்தரியை உன்உணவில் கூட்டு

627)
மூட்டு வலியை முழுவதும் போக்க,
முடக்கத்தான் கீரை கொடு

628)
சுக்கு பனைவெல்லம் வாயில் சிறிதொதுக்கு;
சுக்கலாய்ப் போய்விடும் வாய்வு

629)
நாளும் பருப்புமணத் தக்காளி உண்போர்க்கு
மூலம் சரியாகும் ஆம்

630)
கற்றாழை சூழ்ந்த உணவு முறைஅமை;
கற்றோர் வியப்பார் உனை


November 19, 2014

அவளதிகாரம் - இயற்கை..இயற்கையைத் தவிர வேறில்லை :


இன்பம்/ இயற்கையதிகாரம் / என்குறள் 436-440 /

இயற்கையைச் சொல்கிறேன்; நீவீர் இயன்றபொருள்
கொண்டால்நான் இல்லை பொறுப்பு
பூத்தாடும் தோட்டத்தில் காவலில்லை என்றானால்
கூத்தாடும் தேனுண்ணும் வண்டு
சட்டெனப் பற்றுமாம் வண்டுகள்; மொட்டுகள்
பட்டெனப் பூக்கும் பொழுது

கொய்யும் தொலைவிலுண்டு கொய்யாக் கனியிரண்டு;
காய்க்குமா கொய்துண்ணும் வாய்ப்பு

தாங்கும்தன் தண்டையும் தொய்திட வைத்திடும்
தூங்கும் பலாப்பல உண்டு