இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label குறள். Show all posts
Showing posts with label குறள். Show all posts

July 20, 2016

ஐயன்மேல் ஐயம் கொள்வோர் தன்னால் வீழ்வார் ... !!!!!!!


குறளோனுக்கு ஆதரவாய் ’என்குரல்’ அதிகாரம் ஒன்று :


796)
பொதுமறையைத் தந்தவர்க்குச் செய்வோம் சிறப்பு;
பதுக்கி மறைப்பது எதற்கு


797)
எம்ஐயன் மேல்ஐயம் கொள்பவர்தாம் தன்னைத்தான்
நம்பா தவருக்குச் சான்று


798)
போற்றுவோர் ஏற்றம் பெறுவார்; தூற்றுவோர்
மாற்றம் அடைவார் பிறகு


799)
போற்றி இருந்திருக்க வேண்டியதை சாக்குக்குள்
போர்த்தியவர் சாக்கடைக்கு ஒப்பு


800)
சாதியில்லாப் பார்க்காணப் போதித்த ஐயனுக்குள்
சாதிகண்டார் நாதியில்லாச் சாது


801)
’மடச்சாமி யார்’சொல்லை மந்திரி ஏற்றால்
’மடச்சாமி’ யார்என்று கூறு


802)
நம்பி வருவோரின் சங்கை அறுப்போரா
கங்கைக் கரையிருக்கும் சாது


803)
பாக்களால் பாருக்கு உரைத்தவரைப் சாக்குக்குள்
சாத்திவிட்டுச் சொல்வார்பார் சாக்கு


804)
பாக்கொண்டு பாரை வடித்தவரின் நோக்கம்
உடைப்பவர் பாறைக்கும் கீழ்


805)
ஈரடிக்குள் வாழ்வை அடைத்தவரை ஓரடியில்
வீழ்த்த நினைத்தால் தவறு


December 20, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-பொருள்


வாழ்க உறவுகள் .. இந்த இழையில் 300 குறள்கள் என்ற இலக்கை அடைதிருக்கிறேன் ... (+ விளக்கக் குறள்கள் 1500 + கையிறுப்பு 200+ = ஆக மொத்தம் 2000 + குறள்கள் :))

4 ஆண்டுகளுக்குமுன்... ஒன்றுமில்லாமல் வேடிக்கைப் பார்க்க வந்தவனை.... ஊக்குவித்து இன்று 2000+ குறள்களுக்குச் சொந்தக்காரனாக மாற்றி வைத்திருக்கும் என் இணைய உறவுகளுக்கு நன்றிக் கடனாக என் செய்யப்போகிறேன் நான் ?

இதுதான் நாம்வாழும் உலகு :

296)
ஒன்றழித்து இன்னொன்று வாழும் உலகிலின்று

ஒன்றுபட்டால் தானுண்டு வாழ்வு

297)
பாதை வழியெல்லாம் பாறை இறைந்திருந்தால்

பாதவலி ஏற்பதுதான் தீர்வு

298)

திட்டம் தெரிந்தோரைக் காட்டிலும் திட்டத்

தெரிந்தோரே வல்லவராம் இன்று

299)

கூசாது கையேந்தும் கீழோர்நம் முன்வந்தால்

பேசா(து) ஒதுங்குதல் நன்று

300)
பாடுபட்டோர் பாதையில் ஓய்ந்திருப்பார்; கேடுகெட்டோர்

போதையில் ஓய்வெடுப்பார் பார்