கருப்பென்னும் காரணத்தால் யாரும் நிழலில்
ஒதுங்க மறுப்பதில்லை ஆம்
947)
சிகப்பை அழகாய், கருப்பை இழுக்காய்,
வகுப்போர் உறவை விலக்கு
948)
குயிலை, நிறத்தால் குறிப்போர் இயல்பை
அறிந்து,அவரை மொத்தம் ஒதுக்கு
949)
கருப்பை இழிவென்று உரைப்போர், கரும்பலகை
மேல்எழுதிக் கற்றவர்தாம் பார்
950)
மணக்கும் மலரிலும் இல்லை கருப்பு,
மனிதர்க்கு அதுதான் சிறப்பு

