இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label தூதுக்குறள். Show all posts
Showing posts with label தூதுக்குறள். Show all posts

April 5, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்


பிறந்த நாள் பரிசு :)


316)
நிலவோ உலகிலோர் அங்கம்; உலவும்
இவளோ உலகம் எனக்கு

317)
தலையணையா வேன்;தழுவிக் கொண்டே துயில்வாள்;
நிலையிணை உண்டோ இதற்கு

318)
நகம்கடித்துத் துப்புவாள்; குட்டி நிலவாய்
முகம்காட்டும் என்னுள் அது

319)
பூவிரல் கொண்டு சொடுக்கெடுப்பாள்; பூவுலகில்
ஈடில்லை ஏதும் இதற்கு

320)
இசைக்குத் தலையசைப்பாள்; என்னுள் திசைகள்
கலங்கும் இசைவெனக் கொண்டு

February 8, 2013

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்



காதலா..என் காதலா........

301)
என்தாகம் என்னென்(று) அறிந்தும்ஏன் என்வலையுள்
வந்தின்றும் சிக்கவில்லை நீர்

302)
நீர்சேர்ந்தால் நெல்சோறு; மண்சேறு; தேன்சாறு;
நானென்ன ஆவேனாம் கூறு

303)
உம்வாசம் நானுணர்ந்தேன்; தன்வேசம் தானுதறி
முன்வாசல் ஓடும் மனது

304)
ஒத்த அதிர்வெண்ணோ(டு) ஒன்றாய் அலைவரிசை
வாய்த்தவன் வந்தமைந்தால் தேன்

305)
சொல்லாமல் ஆறாது; சொன்னாலும் தீராது
சொல்லடா என்செய்ய வென்று

November 14, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்-இன்பம்

எல்லாம் அவளே:



276)
பிணக்கில் விழவைப்பாள்; நானறிவேன் இன்று
கணக்கில் சிலஇழப்பேன் என்று

277)
கொழுந்துவிட்டாள் என்னுள்; இடம்கொடுத்தேன்; பற்றிக்
கொளுந்துவிட்டால் என்செய்வேன் நான்

278)
கண்ணாடி முன்னாடி நான்நிற்பேன்; உள்ளிருந்து
என்கண்ணுள் பார்ப்பாள் அவள்

279)
ஓர்வார்த்தை சொல்லாள்;கூர்ப் பார்வையால் கொல்வாள்;ஆம்
போரின்றி வெல்வாள் இலக்கு

280)
இதழ்சுழிப்பாள்; ஆழ்சுழலில் சிக்கிய பூவின்
இதழாக மூழ்கும் மனது


October 18, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்



உலக நடப்பு : /பொருள்
256)
மொந்தையின் உள்இருந்தால் பாலேதான் என்றாலும்
கள்ளெனவேக் கொள்ளப் படும்


257)
தடையில்லாப் பாதையில்நீ தொட்டதெல்லாம் வெற்றியென்றால்
உன்தேர்வின் மேல்ஐயம் கொ
ள்

258)
மூடும் கதவைக் கவனிக்கும் கண்ணறியா(து)
ஆடித் திறக்கும் கதவு


259)
சிரம்தாழ்த்தி சிந்தனையால் நோக்குவது; வாழ்வின்
சிரமத்தைப் போக்கும் வழி


260)
கெடுவதுபோல் தோன்றிடினும் உச்சத்தைத் தொட்டுவிடும்;
விட்டுக் கொடுத்தவன் வாழ்வு

October 3, 2012

இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..! / தூதுக்குறள்


மகிழ்வில், மனமுறிவில் சில ‘போ’க்கள்..:


241)
தாழும் பொழுதுன்தோள் தூக்கஆள் வந்துநின்றால்
வாழ்நாளை வென்றவன்நீ போ

242)
தன்னலம் இன்றிச் செயல்புரிவோர்க்(கு) எல்லாமும்
தன்னால் அமைந்துவிடும் போ

243)
காத்திருந்தால் வாராது வாழ்வு; உனைச்சுற்றி
காற்றிருந்தும் வீசாது போ

244)
காலின்கீழ் மட்டுமே சுத்தமெதிர்ப் பார்க்காதே;
கீழ்க்குணத்தின் கீழ்அது போ

245)
உன்னை அறியாமல் உண்மை புரியாமல்
வாழ்ந்து பயனென்ன போ