இயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

April 26, 2017

நபிமொழி - 18 :- கல்வி..! கற்போம்...கற்பிப்போம்..!!


916)
ஆளுமைக்கு மத்தியில் பெண்களுக்குக் கற்பிக்க
நாளொன்றை மொத்தம் ஒதுக்கு
................ புகாரி 101

917)
பெற்றதைத் தந்துதவ; கற்றதைக் கற்றுத்
தருவதற்குப் பேராசை கொள்
................... புகாரி 73

918)
விரும்பாரைக் கண்(டு)அவரைத் தள்ளி; அறிவோரைத்
தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொடு
.................. புகாரி 127

919)
இனியதைச் சொல்வீர் விரும்பத் தருவீர்
திணிக்காதீர் என்பதுஇறை வாக்கு
............... புகாரி 69 6125

920)
நேரடியாய்க் கேட்பதைக் காட்டிலும் கேட்டவர்
கூறுவதைக் கேட்பதும் நன்று
.................... புகாரி 67

June 19, 2015

கற்றதும்...பெற்றதும்.... !


491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட
பிறகே வருமாம் அது


492)
கற்றடையும் கல்விக்கும்; வாழ்நாளில் பெற்றடையும்
கல்விக்கும் இல்லை தொடர்பு



493)
கற்றுவரும் பாடத்தைப் பற்றியிருந் தாலது
பெற்றுத் தரும்நற் சிறப்பு

494)
வாக்கியம் நன்றாய் வருவதைக் காட்டிலும்
வாக்கின் நயமே சிறப்பு

495)
எழுத்தில் பிழையிருந்தால் தட்டி; கருத்தில்
களையிருந்தால் கொட்டித் திருத்து