தாய்வந்து எனதருகில் தானமர்ந்தால் பின்னந்த
வானுலகு என்பதெல்லாம் பொய்
தங்கையிவள் மொண்டு வரும்கூழும்; கங்கையவள்
கொண்டு தரும்நீரும் ஒன்று
திக்காமல் எத்திக்கும் சொல்வதற்கு அச்சமில்லை;
அக்காவே எம்வாழ்வின் அச்சு
அக்காள் இருக்கும் வரைதான் தொடருமா
மச்சான் உடன்நல் உறவு
சொந்தங்கள் தள்ளியென்னை வைத்தாலும் என்அண்ணன்
தங்கத்தில் செய்துதந்தான் சங்கு