381)
அழிவில்லை என்போர் அறிந்ததில்லை போலும்
கிளையில் இலையின் நிலை
382)
பழம்மட்டும் தானா அழகு; பழுத்து
விழும்இலையும் தானே அழகு
383)
ஆல்வைத்து வாழ்ந்தார்நம் முன்னோர்; வளர்ந்ததை
ஆள்வைத்துச் சாய்க்கிறோம் நாம்
384)
வாழைதலை சாய்ப்பது தன்குலையைக் காப்பதற்கு;
கோழைத் தனத்தினால் அன்று
385)
முயற்சி விதையாம்; முளைத்தால் மரமாம்;
புதைந்தால் உரமாம் பிறர்க்கு
Tweet | |||||
No comments:
Post a Comment